ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் தனுஷ் ரசிகாஸ்: காரணம் அந்த 'கே'…

தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை அவ்வப்போது தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

முதலில் சந்தோஷப்பட்ட ரசிகர்கள், தற்போது அவரை விளாசுகிறார்கள்.

இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார் ஐஸ்வர்யா. தனக்கு பிடித்த இளையராஜா அங்கிளை சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார்.

அதை பார்த்தவர்கள் ஐஸ்வர்யாவை விளாசியுள்ளனர். அதே சமயம், ரஜினி ரசிகர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள்.

உன்னை பிரிந்த பிறகு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் பார்த்தியா என்று சொல்லி, தனுஷை கடுப்பேற்றவே ஐஸ்வர்யா இப்படி செய்கிறார் என்று சந்தேகமாக இருப்பதாக
தனுஷ்
ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்பொழுது பார்த்தாலும் கேமராவும், கையுமாக தான் இருப்பார் போன்று. ஐஸ்வர்யாவின் அந்த கேமராமேன் யாருய்யா என்று தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை ஐஸ்வர்யாவின் கையில் 2 இந்தி படங்கள், ஒரு தமிழ் படம் இருக்கிறது. ஒரு வேளை தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்கத் தான் இளையராஜாவை சந்தித்திருப்பாரோ என்றும் பேச்சு கிளம்பியிருக்கிறது.

ஐஸ்வர்யா தனக்கு பிடித்ததை செய்வதற்காக அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் எப்படிப்பட்டவர்?: உண்மையை சொன்ன நானே வருவேன் ஹீரோயின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.