தனுஷை விடாமல் துரத்தும் ஐஸ்வர்யா: இதுக்கு ஒரு எண்டே கிடையாதா..?

சமீப காலத்தில் கோலிவுட் வட்டாரத்திலே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என்றால் அது
தனுஷ்
, ஐஸ்வர்யா பிரிவு தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரஸ்பரம் பிரியவுள்ளதாக இருவரும் அறிவித்தனர். பிரிவிற்கு பின்னர் இருவரும் தங்களது பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவாகரத்து அறிவிப்பிற்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அண்மையில் இவரின் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் வெளியானது. இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஐஸ்வர்யா புதிய படம் ஒன்று இயக்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது நேரடியாக பாலிவுட்டில் இயக்குனராக தடம் பதிக்கவுள்ளார்.

அதே போல் தனுஷும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் ‘வாத்தி’ படத்திலும் நடித்து வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட மோனல்: தங்கையின் நினைவு நாளில் உருகிய சிம்ரன்..!

அண்மைக்காலமாக தினமும் தன்னுடைய அன்றாட வேலைகளை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டிங்கிலே இருந்து வருகிறார் ஐஸ்வர்யா. அந்த வகையில் தற்போது புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது க்யூட் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனுஷும் இன்று மாலை தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது
ட்விட்டர்
பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

தனுஷை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் பதிவிட்டுள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். காலைல இருந்து சும்மா இருந்துட்டு தனுஷுக்காகவே வீம்புக்கு பண்றீங்களா என கிண்டலடித்து வருகின்றனர். ஆனாலும் இதெல்லாம் எதார்த்தமா நடக்குறது என நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துத்து, ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

பர்ஸ்ட் Half Beast; செகண்ட் Half RRR; வைரலாகும் வீடியோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.