இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தகவல்.!

இலங்கைக்கு மேலும் 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடனுதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ஏழாயிரத்து 850 கோடி ரூபாய் கடனுதவி வழங்க ஏற்கனவே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து, டீசல், அரிசி உள்ளிட்டவை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது.

இந்நிலையில், இலங்கைத் தூதர் மிலிந்தா மோரகோடா டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், கூடுதல் கடனுதவி கோரப்பட்ட நிலையில், இந்தியா உதவ முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.