ஜம்முவில் ஒரே நாளில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில், சைனபோராவில் உள்ள பதிகாம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. முன்னதாக தீவிரவாதிகளை தேடி வீரர்கள் சென்றபோது அவர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.