காஞ்சிபுரம் || தனியார் தொழிற்சாலை பேருந்து தீவிபத்து.. காவல்துறை விசாரணை..!

சாலையில் நிறுத்தியிருந்த பேருந்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகட்டத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து காஞ்சிபுரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென  அந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கதினர் உடனடியாக தீயணைப்புதுறையினர் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடை வெயிலால் தீப்பரவியதா அல்லது வேறெதேனும் காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.