சோனம் கபூர் வீட்டில் ரூ. 2.40 கோடி பணம், நகை கொள்ளையடித்த நர்சு…!

பிரபல நடிகை சோனம் கபூர் வீட்டில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் சோனம் கபூர் .

இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனம் கபூரின் வீட்டில் நர்சாக பணிபுரியும் அபர்னா ருது வில்சன் ( வயது 31) என்ற பெண் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சோனம் கபூரின் மாமியாரின் உடல்நிலையை கவனிப்பதற்காக நர்சஸ் அபர்னா பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர், சோனம் கபூரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு நர்சின் கணவர் நரேஷ் குமார் சாஹர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து, நடிகை சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்த நர்ஸ், கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நர்சிடம் இருந்து கொள்ளையடித்த நகை, பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.