இலங்கை அதிபர் அலுவலகம் முன் பால் காய்ச்சிய போராட்டக்காரர்கள்| Dinamalar

கொழும்பு: இலங்கை அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ள போராட்டக்காரர்கள் நேற்று சிங்கள, தமிழ் புத்தாண்டை பால் காய்ச்சி கொண்டாடினர்.

நம் அண்டை நாடான இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆறு நாட்களாக தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று போராட்டக் களத்திலேயே சிங்கள, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. போராட்டக்காரர்கள் காலையில் சூரியன் உதித்ததும் பால் காய்ச்சினர். பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல இசையமைப்பாளர், விக்டர் ரத்னாயகே, கிரிக்கெட் வீரர் ரோஷன் மகனமா உள்ளிட்ட பிரபலங்களும் போராட்டத்தில் இறங்கினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.