14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்… முக்கியக் குற்றவாளியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

மேற்கு வங்கம் நாதியா மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த  வழக்கில் சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபரான பிரபாகர் போதார் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.

பிரபாகர் தமது நண்பருடன் கடந்த 12ந் தேதி கைது செய்யப்பட்டார். பலாத்காரம்  நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் மத்திய தடயவியல் நிபுணர்களுடன் சென்று அடையாளங்களை சேகரித்தனர். கடந்த 4 ஆம் தேதி பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி மறுநாள் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தையடுத்து பெண்ணின் தந்தை மிரட்டப்பட்டு, உடலை எரித்து விட்டதும் இதற்கு காவல்துறையை சேர்ந்த சிலர் உடந்தயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.இவ்வழக்கை சிபிஐ விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.