உள்துறை அறிவித்த பயங்கரவாதி| Dinamalar

புதுடில்லி,-பல பயங்கரவாத சம்பவங்களில் தொடர் புடைய முஷ்டாக் அகமது ஸர்கரை, மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த முஷ்டாக் அகமது, பாக்.,கில் இருந்தபடி பயங்கரவாத செயல்களை நடத்தி வருகிறார்.கடந்த, 1999ல் ஆப்கனுக்கு கடத்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்த பயணியரை மீட்பதற்காக விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளில், முஷ்டாக் அகமதுவும் ஒருவர்.’ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை துாண்டி வரும் முஷ்டாக் அகமது ஸர்கர், இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகிற்கே அச்சுறுத்தலாக உள்ளார்’ என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.எனவே, முஷ்டாக் அகமதுவை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், பயங்கரவாதியாக அறிவித்து, உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.