நெல்சன் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை…அனிருத் உருக்கம் ..!

கோலமாவு கோகிலா
படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான
நெல்சன்
தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக வலம் வருகின்றார்.அடுத்தடுத்து
விஜய்
மற்றும் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற நெல்சனின் இயக்கத்தில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது.

விஜய் ரசிகர்களை பீஸ்ட் முழு திருப்தியடைய செய்தாலும் பொதுவான ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையே பெற்றுவருகின்றது. இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. வெளியான இறுதினங்களில் நூறு கோடி வசூலை பீஸ்ட் நெருங்கியுள்ளது.

பீஸ்ட் வெற்றியா ? தோல்வியா ? ரோகினி தியேட்டர் ஓனர் அளித்த பிரத்யேக பேட்டி..!

இந்நிலையில் பரபரப்பான இயக்குனராக வலம் வரும் நெல்சனை பற்றி இசையமைப்பாளரும் அவரது நெருங்கிய நண்பருமான
அனிருத்
உருக்கமாக பேசியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டே நெல்சன் நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கினார்.

நெல்சன்

ஆனால் ஒருசில காரணங்களால் அப்படம் கிடப்பில் போடப்பட்டது.அதைத்தொடர்ந்து எப்படியாவது இயக்குனராக வேண்டும் என்று ஆறு வருடங்கள் நெல்சன் போராடினார். அந்த ஆறு வருடங்களில் அவர் பட்ட கஷ்டங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை.அந்த அளவிற்கு இயக்குனராவதற்கு நெல்சன் போராடினார். அவரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை தான் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

விஜய்

மேலும் தற்போது ரசிகர்கள் நெல்சனை கொண்டாடுவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது. ரசிகர்கள் நெல்சனிடம் புகைப்படம் எடுத்துக்கொள்வதை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. இது அவரின் உழைப்பிற்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என அனிருத் உருக்கமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Beast க்கு விஜய் கொடுத்த பூஸ்ட்; மனம் திறக்கும் நெல்சன்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.