வானில் பறந்த இண்டிகோ விமானத்தில் பயணியின் செல்போனால் திடீர் தீ விபத்து

டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில், பயணியின் செல்போன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசாம் மாநிலம் திப்ருகர்  விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவரின் செல்போனில் தீப் பொறி வெளியேறி தீப்பிடித்தது.

தீ மற்ற இடங்களுக்கு பரவுவதற்குள் துரிதமாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீ அணைப்பானை கொண்டு தீயை அணைத்தனர். விமானம் பத்திரமாக டெல்லி விமான நிலையம் வந்தடைந்தது. செல்போன் தீப்பற்ற என்ன காரணம் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.