மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

டெல்லியில் மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து குதித்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அக்சர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தின் கூரையில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை, அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். இருப்பினும் பெண் மாடியில் இருந்து கீழே குதித்தபோது, துரிதமாக செயல்பட்ட சகபயணிகளும், மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களும் போர்வையை விரித்து பெண்ணை கீழே விழாதவாறு பிடித்தனர்.

குதித்தவேகத்தில் காலில் பலத்த காயங்களுடன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். விசாரணையில் பெண் பஞ்சப்பை சேர்ந்தவர் என்றும் அண்மையில் வேலையை துறந்ததும் தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.