நரிக்குறவர் வீட்டில் இட்லி, நாட்டுக்கோழி குழம்பை ருசித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின்.!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று 223 நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா,  முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். 

இதையடுத்து, ஆவடி, திருமுல்லைவாயில், ஜெயா நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புப் பகுதி மக்கள் மக்களுடன் கலந்துரையாடினார். அவருடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

அப்போது, ஸ்டாலின் தான் வராரு என ஒரு சிறுவன் பாடலை பாட அதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் கேட்டு மகிழ்ந்தார். அதன்பிறகு அவர் அணிவித்த ஊசி, பாசி மணிகளை கழுத்தில் அணிந்துகொண்டார். 

இதையடுத்து, அங்குள்ள ஒரு வீட்டிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்று அங்கு அவர்கள் வழங்கிய இட்லி, மெதுவடை, நாட்டுக் கோழி குழம்பை சாப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.