நடிகர் சுந்தர் சி நடிப்பில் வில்லனாக இரங்கும் பிரபல பாலிவுட் இயக்குனர்…!

சுந்தர் சி
நடிக்கும் புதிய படத்தில்
அனுராக் காஷ்யப்
வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு,
குஷ்பு
, சுந்தர் சி மற்றும் அனுராக் காஷ்யப்புடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“உங்கள் இரு பக்கங்களிலும் மேதைகள் நிற்கும் போதுபேச்சே வராது. அற்புதமான இயக்குனர் அனுராக் காஷ்யப் என் கணவர் சுந்தர் சியுடன் ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருக்கிறார். அனுராக் தனது எளிமை மற்றும் பணிவான நடத்தையால் என்னை வியக்கச் செய்தாற். அப்படிப்பட்ட அடக்கமான மனிதர் அவர்” என்று தெரிவித்திருந்தார்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ?

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. “இயக்கத்தைத் தவிர, சுந்தர் சி,
பட்டாம்பூச்சி
,
தலைநகரம் 2
மற்றும்
வல்லன்
உட்பட சில படஙக்ளில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

அதில் இயக்குனர்
திருஞானம்
இயக்கத்தில் நடிக்கும் படமும் ஒன்று. இவர் இதற்கு முன் த்ரிஷா நடிப்பில் ‘
பரமபதம் விளையாட்டு
‘ படத்தை இயக்கியிருந்தார்.சுந்தர் சியின் இந்தப் படத்திற்கு வலிமையான வில்லன் கதாபாத்திரம் வேண்டியிருந்தது.

அதற்காக பல நடிகர்களை அவர்கள் பரிசீலித்தனர், மேலும் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையுடன் கூட தீவிர தேடலில் ஈடுபட்டோம். பின்னர் அனுராக் தான் அதற்கு சரியான தேர்வு என்று முடிவு செய்தோம்” என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. நடிகை ராகினி திவேதி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.