அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும் நடிகை சமந்தா…!

நடிகை
சமந்தா
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார்.நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் பிரபுவும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிருத்
இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே நாட்களில் இத்தனை கோடியா ?

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா இந்தப் படத்தில் தனது பகுதிக்கான டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். அவர்
டப்பிங்
ஸ்டுடியோவில் காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் முடிந்தது. இதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் மிக மிக ஆர்வமாக இருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் பணிபுரிந்த அனுபவத்தை அற்புதமானதாக மாற்றிய அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றும் சமந்தா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பின்னர்
காத்து வாக்குல ரெண்டு காதல்
படத்தின் மூலம் சமந்தா மீண்டும் தமிழுக்கு திரும்பியுள்ளார். இந்தப் படம் அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.