“நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும்!'' – பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள கே.கே.படேல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தொடக்க விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவராலும் மருத்துவக் கல்வியை எட்ட முடியும்.

பிரதமர் மோடி

இந்த குறிக்கோள்களின் மூலமாக அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.

அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவை நினைவு கூர்ந்த மோடி, “புஜ் மற்றும் கட்ச் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்தப் பகுதிக்கு இப்போது புதிய விதியை எழுதி வருகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.