கீவ் நகரில் தாக்குதல் கடுமையாகும்; ரஷ்யா எச்சரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மாஸ்கோ: தங்கள் நாட்டு மண்ணில் தாக்குதல் நடத்தினால், உக்ரைன் தலைநகர் கீவ் மீது பதிலடி கடுமையாக இருக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு நாட்டு எல்லையில் உள்ள பிரைன்ஸ்க் பகுதியில் வெடிகுண்டுகளை வீச உக்ரைன் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்ததாகவும், அதில் 8 பேர் காயமடைந்ததாக நேற்று(ஏப்.,14) ரஷ்யா குற்றம்சாட்டியது. அதேநாளில் ரஷ்யாவின் பெ்கோரோட் பகுதி உயர் அதிகாரி கூறுகையில், எல்லை பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு மற்றும் அண்டை கிராமங்களில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த உக்ரைன், ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிர்ப்பு மனநிலையை அதிகப்படுத்த அந்நாடு முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

latest tamil news

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரஷ்யாவில் தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டாலோ அல்லது சதி செய்தாலோ, கீவ் நகரில் ஏவுகணை மூலம் கடுமையான தாக்குதல் நடத்துவது அதிகரிக்கப்படும். கீவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ தொழிற்சாலைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், நீண்ட தூரம் மற்றும் குறுகிய தூர விமானங்களை தாக்கிஅழிக்கும் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன.

latest tamil news

ரஷ்யாவின் கிலிமோவா பிராந்தியத்தில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைனின் எம்ஐ- 8 ஹெலிகாப்டர்களை,எஸ்-400 ஏவுகணை அமைப்பு தாக்கி வீழ்த்தியது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.