சிகிச்சையின்போது ஆத்திரம் – கத்தரிக்கோலால் மருத்துவரை தாக்கிய நோயாளி

நோயாளி தாக்கியதில் மருத்துவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
மேற்கு டெல்லியின் திலக் நகர் பகுதியிலுள்ள சென்ட்ரல் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷ்னர் கன்ஷ்யம் பன்சால் கூறுகையில், ’’இன்று காலை சென்ட்ரல் மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட குல்தீப் சிங்(40) என்ற நோயாளி மருத்துவரை தாக்கிவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மதுபோதையிலிருந்து விடுபட ஏப்ரல் 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போது மருத்துவரின் கட்டுப்பாட்டை மீறி நோயாளி வன்முறையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
image
தான் மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என அடம்பிடித்ததாகவும், அவரை தடுத்த டாக்டர் விபின் ஜா மீது கோபம்கொண்ட குல்தீப் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து தாக்கியதாகவும் கூறினர். மருத்துவமனைக்கு சென்று இதுகுறித்து விசாரித்தோம். அதிர்ஷ்டவசமாக மருத்துவருக்கு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. மருத்துவர் புகார் எதுவும் அளிக்காததால் நோயாளிமீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை’’ என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.