என்ஐடி விடுதியில் மாணவி தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

என்ஐடி வளாக மாணவியர் விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில்  இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்த அவளா சவுமியா தேவி என்ற மாணவி பயின்று வந்தார்.

விடுதியில் அவருடன் தங்கியிருந்த மாணவி வெளியில் சென்றிருந்த நிலையில், சவுமியா மட்டும் தனியே இருந்துள்ளார். அவரின் தோழி தீட்சனா அறை கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் உடைத்து உள்ளே சென்ற போது அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காஅக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.