நிரப்ப தலைமை நீதிபதி என்.வி. ரமணா உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : ”நீதித்துறையில் காலியான இடங்களை நிரப்பவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில், நீதித்துறை மாநாட்டை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா துவக்கி வைத்து பேசியதாவது:நாட்டில் போதுமான நீதிமன்றங்களும், நீதித்துறைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இருந்தால்தான் நீதியைப் பெற முடியும். நம் நீதித்துறை அளவுக்கதிகமான சுமையுடன் செயல்பட்டு வருகிறது.

latest tamil news

நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றது முதல், நீதித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பி, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறேன். நீதிபதிகள் மீது தாக்குதல் சம்பவங்களை தவிர்க்க என்னால் முடிந்த முயற்சிகளை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.