கள்ளகுறிச்சி || கார் மீது மோதிய வேன்.. இருவர் பரிதாப பலி..!

கார் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏமத்தூர் பகுதியை சேர்ந்த சிலர் சிங்கார பேட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது செங்கம்  சாலையில் சென்றுகொண்டிருந்த போது வேன் ஒன்று கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் நொறுங்கியது. இதில், காரில் பயாணம் செய்த  இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தககலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.