ரயில் வந்த போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண்.. செல்போனில் பேசிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் எழுந்து வந்ததால் நெட்டிசன்கள் ஆத்திரம்..

சரக்கு ரயில் வரும் போது தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பிய பெண் ஒருவர், அந்த ரயில் சென்ற பிறகு  செல்போனில் பேசிக் கொண்டே சாவகாசமாக எழுந்து வரும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா என்பவர் போனில் கிசுகிசுப்பது தான் மிக முக்கியமானது என்று கிண்டலாக தலைப்பிட்டு இந்த வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ரயில் நிலைய தண்டவாளத்தில் படுத்திருந்த பெண் ஒருவர் சரக்கு ரயில் சென்ற பிறகு எந்த பாதிப்பும் இன்றி எழுந்து வரும் காட்சி பதிவாகி உள்ளது.

அதோடு, அவர் தண்டவாளத்தில் இருந்தபடி செல்போன் பேசிக் கொண்டே எதுவுமே நடக்காதது போல் எழுந்து செல்வது தான் நெட்டிசன்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. அந்த பெண் யார் என்று கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி இருக்கின்றனர். 

फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी है ??‍♂️ pic.twitter.com/H4ejmzyVak

— Dipanshu Kabra (@ipskabra) April 12, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.