போர்க்கப்பலுக்கு அஞ்சலி விழா நடத்திய ரஷ்யா: மாஸ்க்வா நமது அடையாளம் என உருக்கம்!


ரஷ்யாவின் முதன்மை கடற்படை கப்பலான மாஸ்க்வா தண்ணிரில் மூழ்கியதை அடுத்து அதற்கான அஞ்சலி விழா துறைமுக நகரான செவஸ்டோபோலில் இன்று நடைபெற்றது.

ரஷ்யாவின் அதிபயங்கர மற்றும் கருங்கடலை ஆட்சி செய்த முதன்மை கடற்படை கப்பலான மாஸ்க்வாவில் ஏற்பட்ட வெடிமருந்து வெடிப்பு காரணமாக பலத்த சேதமடைந்தது, இதையடுத்து சேதமடைந்த மாஸ்க்வாவை கரைக்கு இழுத்து வந்தபோது கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் கடலுக்குள் மூழ்கியது.

வெடிமருந்து வெடித்தலில் கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவிக்கையில், உக்ரைன் தங்கள் நாட்டு ராணுவம் நடத்திய கப்பல் தடுப்பு ஏவுகணை தாக்குதலில் தான் கப்பல் சேதமடைந்தது என தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில், வியாழக்கிழமை ரஷ்யாவின் சோவியத் கால மாஸ்க்வா தண்ணிரில் மூழ்கியதை தொடர்ந்து, அதற்கான அஞ்சலி வழங்கும் விழா ரஷ்யாவின் துறைமுக நகரான செவஸ்டோபோலில் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்திய கேப்டன் செர்ஜி கோர்பச்சேவ், மாஸ்க்வா நமது அடையாளம், நமது சக்தியின் உருவம் நமது நம்பிக்கை மற்றும் 90 களின் கடற்படையின் மறுமலர்ச்சி என புகழ்ந்துரைத்தார்.

இதையடுத்து, மாஸ்க்வா கப்பலுக்காக அஞ்சலி வழங்கிய பாதிரியார், மாஸ்க்வா இழப்பு அதில் 20 வருடங்களாக பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மிகப் பெரிய துன்பத்தை தந்திருப்பதாக தெரிவித்தார்.

சோவியத் காலத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த மாஸ்க்வா கப்பல் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வழிநடத்தும் முக்கிய பணியை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

கீவ்-வில் குவிந்த மனித சடலங்கள்: எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பகீர் தகவல்!  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.