திருச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து போலி மது தயாரித்து விற்பனை செய்த 5 பேர் கைது.!

திருச்சி அடுத்த மணிகண்டம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து போலி மது ஆலை நடத்தி வந்த 5 பேரை கைது செய்த போலீசார் ஆயிரத்து 700 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செட்டி ஊரணிபட்டி பகுதியில் மது கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவல் அடுத்து மது அமலாக்க போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஆயிரத்து 700 போலி மதுபாட்டிலகள், மதுபானம் தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார் காரைக்காலை சேர்ந்த கார்த்திக் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் பாண்டிச்சேரியில் இருந்து மூலம் பொருட்களை வாங்கி மதுபானம் தயாரித்து உள்ளூரில் கடத்தியது தெரியவந்தது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.