ஜிம்பாப்வேயில் புனித யாத்திரை பயணிகளுடன் மலைச் சாலையில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து பெண்கள் உள்பட 35 பேர் பலி.!

ஜிம்பாப்வேயில் புனித யாத்திரை பயணிகளுடன் மலைச் சாலையில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 35 பேர் உயிரிழந்தனர்.

புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைக்காக பெண்கள் உள்ளிட்ட 106 பயணிகளுடன் பேருந்து சென்றது. கரடுமுரடான சாலை, போதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட காரணங்களால் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பெண்கள் உள்பட 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 71 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.