கானா பாடலா, மெலோடி பாடலா? எது சிறந்தது? – என்ன சொன்னார் இசையமைப்பாளர் தேவா?

கானா பாடல்களை விட மெலோடி பாடல்களே சிறந்தது என இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.

கருணாஸ் நடித்துள்ள ’ஆதார்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய மகன் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஸ்ரீகாந்த் தேவா மெலோடி பாடல்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலான பாடல்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கானா பாடல்கள் மற்றும் குத்து பாடல்களை விட மெலோடி சிறந்தது எனவும் தெரிவித்தார்.

image

நான் 50 முதல் 60 வரையிலான கானா பாடல்களை மட்டுமே இசையமைத்தேன். அதைவிட அதிகமாக மெலோடி பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் என்னை கானா புகழ் தேவா எனவே அழைக்கிறார்கள் என வருத்தம் தெரிவித்தார். இதனால் ஸ்ரீகாந்த் தேவா மெலோடி பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுவே சிறந்தது என கேட்டுக்கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.