கடற்கரை திருவிழா கலை நிகழ்ச்சிகள்| Dinamalar

புதுச்சேரி : காந்தி சிலை அருகே கடற்கரை திருவிழாவையொட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை சார்பில், கடற்கரை திருவிழா கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. விழாவையொட்டி புதுச்சேரி கடற்கரை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, நேற்று காந்தி சிலை அருகே மூங்கில் இசைக்கருவி, நாட்டுபுற இசை நடன நிகழ்ச்சி, வான வேடிக்கை, தப்பாட்டம், பாண்டி மெரினாவில் கைப்பந்து போட்டி, சிலம்பம், உறியடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.