நாளை வரை கர்நாடகாவில் மழை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. இது, நாளை வரை நீடிக்க வாய்ப்புள்ளது.இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநிலத்தின் சில இடங்களில், சாதாரண மழை பெய்கிறது. பல்வேறு மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்கிறது. நாளை வரை, பரவலாக மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன.நாளை வட மாவட்டங்களில், மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். மலைப்பகுதி, கடலோர பகுதிகளில் அடுத்த மூன்று நாட்கள் மழை பெய்யும்.ஏப்ரலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, இடி, மின்னலுடன் மழை பெய்வது சகஜம்.அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்புகள் அதிகம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.