மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசல்: உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு – முதல்வர் உத்தரவு

மதுரை: மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்.16) நடைபெற்றது.இதில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.