பெங்களூரு : கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலையை காரணம் காட்டி, ஈஸ்வரப்பாவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை வலியுறுத்தி, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களையே காணவில்லை.சந்தோஷ் தற்கொலைக்கு பின், காங்கிரஸ் சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க முயற்சிக்கிறது.இன்று முதல், மாவட்ட அளவில் போராட்டம்
நடத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நடக்கும் தொடர் போராட்டத்தில், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிப்பிரசாத், மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் அமைச்சர் ஜமிர் அகமது கான், ஹாரிஸ் போன்றோர் பங்கேற்கவில்லை. கான்ட்ராக்ட்களில் பா.ஜ., பிரமுகர்களின் ‘கமிஷன்’ குறித்து, ஊடகங்களில் அரசை வசைபாடிய ஹரிப்பிரசாத் கூட போராட்டத்தில் பங்கேற்கவில்லை.இரு பெரும் தலைவர்களான சித்தராமையா, சிவகுமார் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், கட்சி நிகழ்ச்சி, கூட்டங்கள், போராட்டங்களிலிருந்து விலகியே உள்ளனர்.
பெங்களூரு : கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலையை காரணம் காட்டி, ஈஸ்வரப்பாவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை வலியுறுத்தி, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களையே
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.