தலைவர்கள் ஆப்சென்ட்| Dinamalar

பெங்களூரு : கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலையை காரணம் காட்டி, ஈஸ்வரப்பாவின் அமைச்சர் பதவி ராஜினாமாவை வலியுறுத்தி, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் முக்கியமான தலைவர்களையே காணவில்லை.சந்தோஷ் தற்கொலைக்கு பின், காங்கிரஸ் சுறுசுறுப்படைந்துள்ளது. அடுத்தடுத்த போராட்டங்களை நடத்தி, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க முயற்சிக்கிறது.இன்று முதல், மாவட்ட அளவில் போராட்டம்

நடத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.கடந்த சில நாட்களாக நடக்கும் தொடர் போராட்டத்தில், சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிப்பிரசாத், மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாட்டீல், முன்னாள் அமைச்சர் ஜமிர் அகமது கான், ஹாரிஸ் போன்றோர் பங்கேற்கவில்லை. கான்ட்ராக்ட்களில் பா.ஜ., பிரமுகர்களின் ‘கமிஷன்’ குறித்து, ஊடகங்களில் அரசை வசைபாடிய ஹரிப்பிரசாத் கூட போராட்டத்தில் பங்கேற்கவில்லை.இரு பெரும் தலைவர்களான சித்தராமையா, சிவகுமார் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள், கட்சி நிகழ்ச்சி, கூட்டங்கள், போராட்டங்களிலிருந்து விலகியே உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.