ரஷ்ய படைகளின் தாக்குதலில் 3,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு.. அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலில், சுமார் 3 ஆயிரம் உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரில் சுமார் 10 ஆயிரம் வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர்களுள் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்று சொல்வது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.

போதுமான தகவல்கள் இல்லை என்பதால், பொதுமக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை சொல்வது கடினம் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போரில் 14 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 16 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.