இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ரஷியாவுக்குள் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் போர் நிலைப்பாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷியா மீது பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது,  மேலும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள ரஷ்யா பல்வேறு நாட்டு தலைவர்கள் ரஷ்யா வர தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், பிரிட்டன் பிரதமர் ஜான்சசன் மற்றும்  வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், கன்சர்வேட்டிவ் எம்.பி. மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே மற்றும் 9 மூத்த அரசியல்வாதிகள் – பெரும்பாலும் அமைச்சரவை உறுப்பினர்கள் – ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரஷியா மீது சில நாடுகள் பொருளாதார தடை விதித்த நிலையில், அந்நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,   இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோ கூறுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு எதிராக ரஷ்யா இதேபோன்ற தடையை விதித்தது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட லண்டனின் கட்டுப்பாடற்ற தகவல் மற்றும் அரசியல் பிரச்சாரம், நம் நாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கழுத்தை நெரித்தல் ஆகியவை அதன் முடிவுக்கு காரணம் என தெரிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.