அசோக் செல்வன் நடிப்பில் உருவான புதிய படத்தின் அப்டேட் வெளியிடு…!


நித்தம் ஒரு வானம்
‘ படத்தின் படப்பிடிப்பு ம் முழுவதுமா நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர்
அசோக் செல்வன்
நல்ல கதைக்களம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து கவனம் ஈர்த்து வருகிறார்.

வெங்கட் பிரபு
இயக்கத்தில் அசோக் செல்வன் கடைசியாக நடித்த
மன்மதலீலை
திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.தற்போது அசோக் செல்வன் கார்த்திக் என்பவர் இயக்கத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில்நடித்து வந்தார்.

பயில்வான் ரங்கநாதன் கேட்ட வில்லங்கமான கேள்வி: அஜித்தின் தரமான பதிலடி..!

இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா,
ஷிவதா
என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.ரிது வர்மா மாடர்ன் பெண்ணாகவும், அபர்ணா பாலமுரளி கிராமத்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில்
ஷிவாத்மிகா
ராஜசேகர் கல்லூரி பெண்ணாக நடிக்கிறார்.

ஓ மை கடவுளே படத்தை ஒளிப்பதிவு செய்த
வித்து அய்யனா
ஒளிப்பதிவு செய்கிறார். பெங்களூர் டேஸ், சார்லி, தோழா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களுக்கு பெயர் பெற்ற கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவை
கேக்
வெட்டிக் கொண்டாடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.