விஜய், அஜித்தை மேடையிலே விளாசிய பிரபல நடிகர்: பரபரக்கும் இணையம்..!

கருணாஸ் நடித்துள்ள ஆதார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்
அருண் பாண்டியன்
பேசியுள்ளது மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்த விழாவில் பேசிய இரா.சரவணன், தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்று கூறினார். அவரை தொடர்ந்து பேசிய நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் பேசுகையில், அவரின் இந்த கருத்தை மறுத்தார்.

அருண் பாண்டியன் பேசுகையில், ‘தமிழ் திரையுலகின் பொற்காலம் இப்போது இல்லை, நாங்கள் நடித்த காலம் தான் உண்மையான பொற்காலம். இப்போது வேற்று மொழி படங்கள் தான் தமிழ் சினிமாவை ஆள்கின்றனர்’ என்றார்.

கோடிகளை குவிக்கும் ‘கேஜிஎஃப் 2’: ஆச்சரியத்தில் வாய் பிளக்கும் திரையுலகம்..!

மேலும், ‘
விஜய்
,
அஜித்
ஆகியோர் பெரும் தொகையை சம்பளமாக பெறுவதால், படத்தின் தரம் குறைவதாக குற்றம் சாட்டிய அருண் பாண்டியன், பட்ஜெட்டில் 90% சம்பளத்திற்கு போய் விடுவதால், 10 % தான் படத்திற்கு செலவு செய்யப்படுகிறது. இதனாலேயே தமிழ் சினிமா, பின் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் பல்வேறு விவாதத்தை கிளப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது தான் நாள்ல கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகின்றன. விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளையும், அவர்களுக்கான அரசியலையும் பேசும் படங்கள் இப்போது தான் வெளியாகி வருகின்றன. தமிழ் சினிமா ஆரோக்கியமான நிலையிலே உள்ளதாக அருண் பாண்டியனின் கருத்துக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அது எல்லாம் முடியாது… தமிழ் தான் கரெக்ட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.