சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்த விராட் கோலி: திகைத்துப்போன அனுஷ்கா சர்மா!


சீறிப்பாய்ந்த பந்தை ஒற்றை கையில் பாய்ந்து பிடித்து அசத்திய பெங்களூரு அணி வீரர் விராட் கோலியின் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.

இன்று மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஐபிஎல்-லின் 27வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெங்களூரு அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது இருக்கும் நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டை பெற்றுவருகிறது.

முதல் பேட்டிங்கில் பெங்களூரு அணி வைத்த 190 என்ற வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து மிகவும் சிரமப்பட்டது.

இதனை தொடர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதற்காக களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை மீட்கும் பணியை செய்து கொண்டிருந்தார்.

போட்டியின் இரண்டாவது பாதியில் 17 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என அதிரடியாக விளையாண்டு கொண்டிருந்த ரிஷப் பந்த், பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் வீசிய 16 ஓவரின் இரண்டாவது பந்தை தூக்கி அடிக்க முயற்சி செய்தார்.

அப்போது, சிராஜ் வீசிய பந்து ரிஷப் பந்த்-தின் பேட்டில் மோதி மின்னல் வேகத்தில் பறக்கவே அதை பெங்களுரு அணி வீரர் விராட் கோலி பாய்ந்து தனது ஒற்றை கையால் லாபகமாக கைப்பற்றினர்.

மின்னல் வேகத்தில் பாய்ந்த பந்தை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பவுண்டரி பக்கம் தேடிக்கொண்டு இருந்தபோது,அதனை விராட் கோலி லாபகமாக கேட்ச் பிடித்துவிட்டு தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் மகிழ்ச்சி புன்னைகையுடன் வெற்றி செய்கையையும் செய்து காண்பித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

டெல்லியை ஓடவிட்ட தினேஷ் கார்த்திக்: வெற்றிக்கணக்கை தொடரும் ராயல் சேலஞ்சர்ஸ்!

இந்தநிலையில், விராட் கோலி பிடித்த இந்த மின்னல் வேக கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.