ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை – பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!

குஜராத், மோர்பியில் 108 அடி அனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் .

அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத், மோர்பியின்  பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் அனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் .

சிலையை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துகள். 

மோர்பியில் திறக்கப்பட்ட அனுமன் சிலை, உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், முக்கிய அறிவிப்பாக, தெற்கில் ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.