திட்டக்குடி வெள்ளாற்றில் இருந்து அதிகாலையில் மணல் கொள்ளை.. கொள்ளையர்களை இளைஞர்கள் துரத்திச் சென்ற வீடியோ

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, அப்பகுதி இளைஞர்கள் பைக்கில் துரத்திச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

தொழுதூர் வெள்ளாற்றிலிருந்து மணலை நிரப்பிக் கொண்டு அதிகாலை 5.30 மணியளவில் மகேந்திரா பொலிரோ டெம்போ வாகனத்தில் சிலர் சென்றதைக் கண்ட இளைஞர்கள், 2 பைக்கில் துரத்திச் சென்றனர்.

சாலைகள் குறுகியதாக இருந்ததால் தச்சூர் சாலையில் டெம்போவை திருப்ப முடியாமல் திணறிய மணற்கொள்ளையர்கள், பிரபாகரன் என்பவரது வீட்டு சுவற்றின் மீது மோதி வாகனத்தை திருப்பி தப்பிச் சென்றுள்ளனர். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றும் இளைஞர்களால் டெம்போவை பிடிக்க முடியவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.