ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அடுத்தடுத்த 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள், நூதன முறையில் தடயங்களையும் அழித்துச்சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள பாட்டன்குளம் சாலையில் வசித்து வரும் ராஜேஷ், உஷா, நாகராஜ் ஆகியோர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்களின் வீடு புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

அத்துடன் வீடு முழுவதும் மிளகாய்ப்பொடியை தூவிச்சென்றதுடன், ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆர் பெட்டியையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

புகாரின்பேரில், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் கிருஷ்ணன் கோவில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.