இம்ரான் கான், புதிய பிரதமர் ஷெனாஸ் ஷெரீப்புக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்

தமது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்கா சதி செய்ததாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாடும் தமக்கு எதிரியல்ல என்று கராச்சியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.

சர்வதேச தளங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மூன்று நாடுகளையும் கடுமையாக விமர்சித்து பேசிய இம்ரான் கான் பதவி இழந்த பிறகு இந்த மூன்று நாடுகளுடன் தமக்கு எந்தவிதப் பகையும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தில் இருந்து பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை விடுபட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.