என் வாழ்க்கையில் நடந்ததை தான் படமாக எடுத்தேன்..!ஷாக் கொடுத்த செல்வராகவன்..!

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் செல்வராகவன். ரசிகர்களால் ஜீனியஸ் என்று அழைக்கப்படும்
செல்வராகவன்
தனுஷின்
காதல் கொண்டேன்
படத்தின் மூலம் இயங்குனரானார்.

துள்ளுவதோ இளமை படத்தின் கதை திரைக்கதையை எழுதிய செல்வராகவன் தனுஷின் இரண்டாவது படமான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக வெற்றிகண்டார். அதன் பின்
7G ரெயின்போ காலனி
, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற தரமான படங்களை இயக்கியுள்ளார்.

விஜய் படத்தைப்பற்றி பேசவே பயமா இருக்கு : வம்சி

கடந்தாண்டு இவர் இயக்கத்தில் எஸ்.ஜெ.சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து
நானே வருவேன்
படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

செல்வராகவன்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் செல்வராகவன் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்தே 7G ரெயின்போ காலனி படத்தை இயக்கியுள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

செல்வராகவன்

தன் கல்லூரி காலங்களில் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை வைத்தே இப்படத்தை உருவாக்கியுள்ளார் செல்வராகவன். எனவே கதிர் கதாபாத்திரத்தை செல்வராகவன் தன்னை மனதில் வைத்தே எழுதியுள்ளாராம்.

இருப்பினும் தனக்கு ஒரு பெண்ணின் மீது கல்லூரி படிக்கும் காலத்தில் ஈர்ப்பு இருந்ததை மட்டும் மையமாக வைத்து கற்பனையிலேயே இக்கதையை உருவாக்கியுள்ளார் செல்வராகவன்.M பல ஆண்டுகள் கழித்து இத்தகவல் வெளியானதையடுத்து ரசிகர்கள் இதை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிம்பு – அனிருத் கூட்டணி; ரசிகர்கள் happy!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.