மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரம் டன் எரிபொருளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பா நோக்கி சென்ற வணிக கப்பல் ஒன்று துனிசியா அருகே கடலில் மூழ்கிய நிலையில், அதில் பயணித்த 7 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Equatorial Guinea-லிருந்து Malta-விற்கு சென்ற கப்பல் கேப்ஸ் கடற்கரை அருகே நடுக்கடலில் மூழ்கியது. கப்பலில் பயணித்த பணியாளர்களை கடற்படையினர் மீட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக கப்பலில் தண்ணீர் புகுந்து மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.