ஏழுமலையான் தரிசனத்திற்கு பக்தர்கள் 15 மணிநேரம் காத்திருப்பு| Dinamalar

திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், 15 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக திருமலையில் குறைந்திருந்த பக்தர்களின் வருகை, தற்போது தேவஸ்தானம் வெளியிட்டு வரும் தரிசன டிக்கெட்டுகளால் அதிகரித்து வருகிறது.வார இறுதி நாட்களில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில், 70 ஆயிரத்தை தொடுகிறது.திருமலை வைகுண்டத்தில் உள்ள 16 காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.

எனவே, தரிசனத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் ஆகிறது. நேற்று முன்தினம் மட்டும் 75 ஆயிரம் பக்த்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 34 ஆயிரம் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை மூலம் தேவஸ்தானத்திற்கு 3.40 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.