ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி| Dinamalar

புதுச்சேரி : ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடந்தது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகம் முழுவது கிறிஸ்துவர்கள் 40 நாட்கள் தவகாலத்தினை கடைபிடிப்பது வழக்கம்.கடந்த மார்ச் 2ம் தேதி கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது.

புனித வெள்ளியான 15 ம்தேதி கிறிஸ்துவ ஆலயங்களில் இயேசுவின் பாடுகளை சித்தரிக்கும் சிலுவைபாதை நிகழ்ச்சி நடந்தது.ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு 12.௦௦ மணிக்கு புதுச்சேரியில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் உயிர்ப்பு பெருவிழா நடந்தது. மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடந்தது.

கொரோனா பிரச்னையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சாகமின்றி நடந்த ஈஸ்டர் பண்டிகை இந்தாண்டு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.