இராணிப்பேட்டை: அரக்கோணத்தில் போலி ஆவணத்தை பயன்படுத்தி நிலத்தை விற்பனை செய்த சார் கருவூல கணக்காளர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரக்கோணம் தணிகை போளூர் பகுதியில் 2.96 ஏக்கர் நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்துள்ளனர். முன்னாள் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் இளங்கோவிடம் நிலத்தை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.