வருடாந்திர வசந்தோற்சவம் திருமலையில் நிறைவு| Dinamalar

திருப்பதி : திருமலையில், நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள உற்சவமூர்த்திகளுக்கு, கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் விதமாக ஆண்டுதோறும் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தவருட வசந்தோற்சவம், 14ம் தேதி துவங்கியது.முதல் நாள் ஸ்நபன திருமஞ்சனம், இரண்டாம் நாள் தங்க தேர் ஊர்வலம் நடைபெற்று முடிந்த நிலையில், நிறைவு நாளான நேற்று மதியம் ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர், சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமஸ்வாமி ஆகியோருக்கு வசந்த மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வசந்தோற்சவத்தை முன்னிட்டு சேஷாசல வனம் போன்ற அமைப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்டது மலர் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களும் பலரின் கண்களை கவர்ந்தது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.