திருப்பதி : திருமலையில், நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள உற்சவமூர்த்திகளுக்கு, கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும் விதமாக ஆண்டுதோறும் வசந்தோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தவருட வசந்தோற்சவம், 14ம் தேதி துவங்கியது.முதல் நாள் ஸ்நபன திருமஞ்சனம், இரண்டாம் நாள் தங்க தேர் ஊர்வலம் நடைபெற்று முடிந்த நிலையில், நிறைவு நாளான நேற்று மதியம் ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமி, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர், சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராமஸ்வாமி ஆகியோருக்கு வசந்த மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
இதில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.வசந்தோற்சவத்தை முன்னிட்டு சேஷாசல வனம் போன்ற அமைப்பு மண்டபத்தில் உருவாக்கப்பட்டது மலர் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களும் பலரின் கண்களை கவர்ந்தது.
திருப்பதி : திருமலையில், நடந்து வந்த வருடாந்திர வசந்தோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.ஏழுமலையான் கோவில் கருவறையில் உள்ள உற்சவமூர்த்திகளுக்கு, கோடை காலத்தின் வெப்பத்தை தணிக்கும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.