கர்நாடகாவில் ஹுப்ளியில் போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல்- 40 பேர் கைது

கர்நாடக மாநலம் ஹுப்ளியில் போலீஸ் நிலையம் மீது நேற்று இரவு கும்பல் ஒன்று கல்வீசி தாக்குதல் நடத்தியது. போலீஸ் வாகனங்களையும் அடித்து நொறுங்கி சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்பட 12 போலீசார் காயம் அடைந்தனர்.

இதையடுத்து போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவத்தால் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்கள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்வம் தொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர். வாடஸ்-அப்பில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.. காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வந்த இளம்பெண்ணுக்கு அடி-உதை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.