கேரளாவில் சாலையைக் கடக்க முயன்ற 2 சிறுமிகள் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து.!

கேரளாவின் மலப்புரத்தில் சாலையைக் கடக்க முயன்ற இரண்டு சிறுமிகள் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வாகன ஓட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மலப்புரத்தின் கீழச்சேரி பகுதியை சேர்ந்த விஷ்மியா, ஷிமா ஆகிய சிறுமிகள் டியூஷன் சென்டருக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர்.

இருபுறத்தையும் சரிவர கவனிக்காமல் அவர்கள் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர்கள் மீது பலமாக மோதியது.

விபத்தில் சிறுமிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமிகள் மீது மோதியபின் நிற்காமல் தப்பிச்சென்ற வாகன ஓட்டியை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.