திருப்பதியில் ஏழுமலையான் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து திருமலைக்கு பக்தர்கள் நடைபாதை வழியாக சென்று வைகுண்டம் அறைகளில் பல மணிநேரம் காத்திருந்து ஏழு மலையானை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் குழுவினர் பஜனை பாடல்கள் பாடியபடி வாத்தியங்களுடன்
அலிபிரி நடைபாதை
மார்க்கத்தில் நேற்று திருமலைக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களிடம் திருமலைக்கு வாத்தியங்களுடன் செல்லக் கூடாது என்று அனுமதி மறுத்தனர்.
இதனால் பக்தர்களுக்கும், பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த சித்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி பானுபிரகாவ் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளிடம் பேசினார். இதையடுத்து தமிழக பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி கொண்டு செல்ல திருமலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.