தெலங்கானாவிலும் நில வணிகரும், தாயும் விடுதியில் தீக்குளித்துத் தற்கொலை.. 7 பேர் மீது வழக்கு பதிவு.!

தெலங்கானாவில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட நில வணிகரும் அவர் தாயும், டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேரைக் குற்றஞ்சாட்டிப் பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேடக் மாவட்டம் ராமையம்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் நில விற்பனைத் தொழில் செய்து வந்தார். அவர் தாயின் சிகிச்சைக்காக காமரெட்டி என்னும் நகரில் விடுதியில் தங்கி இருந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

தீக்குளிக்குமுன் இருவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், தங்கள் சாவுக்குக் காரணம் ராமையம்பேட்டை நகராட்சித் தலைவர் ஜிதேந்திரா, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் எனத் தெரிவித்துள்ளனர்.

தங்கள் சாவுக்குக் காரணமானோரைத் தண்டிக்கும்படி முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து 7 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.