பஞ்சாயத் ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றிக்கையில், நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும் என்றும் கூட்டம் நடத்தியதற்கான விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.